Не ви допада? Няма проблеми! Можете да върнете стоките до 30 дни
Няма да сбъркате с подаръчен ваучер. Получателят може да избере нещо от нашия асортимент с подаръчен ваучер.
До 30 дни за връщане на стоки
காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவில், சென்னை 'நவசக்தி ரியர் ஸ்ரீமாந் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் தலைமை வகித்து முன்னுரையாகத் தமிழ் நாட்டைப் பற்றிப்பேசிய செம்பொருள்கள் 'குமரன்' பத்திரிகை வாயிலாக வெளி வந்தன. அவைகளைத் திரட்டி முதலியார் அவர்கள் வாயிலாகவே ஒழுங்குபடுத்தி இந்நூல் வடிவாக வெளியிடலானோம்.
அன்பர்களே ! உலகிலுள்ள பன்னாடுகள் நன்னிலை உற்றுவரும் இந்நாளில், நந்நாடு எந்நிலையிலிரு க்கிறது என்பது கவனிக்கப்படல் வேண் டும். நேற்றுத் தோன்றிய நாடுகளெல்லாம் உயரிய நிலை எய்தியிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்னர் வளம் பெற்றிருந்த நந்தமிழ் நாட்டின் தற்கால நிலையை என்னென்று கூறுவது? நந்தமிழ் நாட்டின் தொன்மையை உன்னுந்தோறும் உன்னுந் தோறும் கண்ணீர் பெருகுகிறது. தமிழ் மக்களாகிய நாம் இற்றைக்குச் சுமார் 7000 ஆண்டுகட்கு முன்னரே உயரிய நாகரிக நிலை பெற்றிருந்தோம். நாம் வாழ்ந்த நிலப்பரப்பு பண்டைநாளில் குமரிநாடு என் னும் பெயர் பெற்றிருந்ததென்றும், அந்நிலப் புரப்பு பின்னை நாளில் நீரால் விழுங்கப் பெற்றதென்றும், நாம் அக்காரணத்தால் வடக்கு நோக்கி வந்தோமென்றும் சில ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார்கள். இப்பொ ழுது இந்து மகாசமுத்திரம் என்று வழங்கப்படும் நீர்ப்பரப்பு நிலப்பரப்பாக விருந்தகாலத்தில் ஆண்டுக்குமரி, பஃறொளி என்னும் இரண்டாறுகள் ஓடின என்று புறநானூறு முதலிய நூல்கள் கூறுகின் றன. அவ்விரு ஆறுகளின் அழிவைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் செப்புகின்றன. எனவே பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விரண்டு ஆறுகளைப் பற்றிக் கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது.
Здравейте! Аз съм Libroamiko, вашият книжен съветник.
Как мога да ви помогна?